இது இருகூரா? இல்லை குப்பைத் தொட்டியா? – வீடியோ காட்சிகள்

கோவை: இருகூரில் குப்பைகள் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து News Clouds Coimbatore வாசகர்கள் கூறியதாவது:-

Advertisement

கோவை இருகூரை அடுத்த கே.ஜி போஸ் நகர் எக்ஸ்டன்சனில் கடந்த பல மாதங்களாக சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த குப்பைகள் பல வாரங்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அங்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

அப்பகுதியில் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வழியாகச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சாலையோரம் மலைபோல் கொட்டப்பட்ட குப்பைகள், காற்றின் வேகத்தில் சாலையெங்கும் பரவிக்கிடப்பதால் வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனர்.

இங்குள்ள குப்பைகளை அகற்றுவதோடு, மேற்கொண்டு குப்பைகள் தேங்காத வண்ணம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று வாசகர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group