கோவை குற்றாலம்: வனத்துறையின் அறிவிப்பு… ஆர்ப்பரிக்கும் நீர் – வீடியோ

கோவை: கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து வனத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மே மாதம் தொடர் கனமழை பெய்தது. இதனால் கோவையின் பிரதான சுற்றுலாத்தலமான கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த மே 24ம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்தது.

Advertisement

Single Content Ad

அருவிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கோவை குற்றாலம் சுற்றுலா மீண்டும் திறக்கப்படாது என்பதை வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ளம் கரைபுரண்டோடிவரும் நிலையில், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது என்றும், நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, அதிகாரிகளின் உத்தரவுப்படி சுற்றுலாவுக்கு அனுமதி மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Single Sidebar Ad

Latest Articles