Krishna jayanthi 2025: குழந்தைகளுக்கு வேஷம் போடுவது ஏன்? என்னென்ன பொருட்களை வாங்கலாம்?

Krishna jayanthi 20a25: கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் ஒரு ஹிந்து மத விழா ஆகும்.

மதுரா நகரத்தில், வசுதேவர் மற்றும் தேவகி தம்பதிக்கு அஷ்டமி திதியில் பிறந்தார். கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணர், பல அற்புதங்களையும், அரக்கர்களை அழித்ததையும் புராணங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி 2025 கொண்டாடப்பட உள்ளது.

குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அல்லது ராதை வேடம் அணிவிப்பது, கிருஷ்ணரின் தெய்வீகத்தை குழந்தைகளிடையே உணர்த்தும் ஒரு வழியாகும்.

குழந்தைகளிடையே பக்தியை வளர்ப்பதற்கும், இந்த விழாவின் மகத்துவத்தை உணரவும், கிருஷ்ணரின் கதைகள், வாழ்க்கை முறைகள் பற்றி அறியவும் இத்தகைய அலங்காரங்கள் உதவுகின்றன

பள்ளிகளிலும், சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று நடனம், கிருஷ்ண கதைகள், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

சமூக பாரம்பரியத்தையும், காலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதுடன், நம்ம வீட்டு சுட்டிக் குழந்தைகளை கடவுள் வடிவத்தில் கண்டு மகிழவும் இத்தகைய வேடங்கள் உதவுகின்றன.

சிறந்த கிருஷ்ணர் உடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றை ஆர்டர் செய்யும் லிங்க்-ஐ இத்துடன் இணைத்துள்ளோம்:-👇

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp