கோவை பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகளில் மாஸ் கிளீனிங்!

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையங்கள், பயணியர் நிழற்குடைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக ஒரே நேரத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என 5 மண்டலங்களுக்குட்பட்ட 100வார்டு பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் நாள்தோறும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள், கொசு ஒழிப்பு பணிகள் , மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளிட்ட இடங்களில் இன்று மாஸ் கிளீனிங் பணிகள் இன்று நடைபெற்றது.

இதில் மாநகராட்சியின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒரே நேரத்தில் 900க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும், கிருமி நாசினி கொண்டு தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

Recent News

Video

Join WhatsApp