கோவை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்

கோவை: சொந்த ஊர் செல்வதற்காக கோவை ரயில் நிலையத்தில் இன்று ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் வரிசையில் நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

தொழில் நகரமான கோவையில் தமிழகம் மட்டுமின்றி பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

பெரும்பாலானோர் தொழிற்சாலை, மில், கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு முன்பே சொந்த ஊர் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் கடந்த சில நாட்களாக கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிக அதிக அளவில் உள்ளது. சிலர் ரயிலில் முண்டி அடித்துக் கொண்டு ஏறுவதால் நெரிசல் ஏற்படுகிறது. சில நேரம் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இன்று மதியம் ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 13352) பிளாட்பாரம் 3க்கு வந்தடைந்தது. இதில் பயணம் செய்ய நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மனைவி, குழந்தைகள் உடன் வந்திருந்தனர்.

Advertisement

அவர்களை வரிசையில் நிறுத்தி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...