கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
கோவை, நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே வானிலை மையம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் (ஜூன் 25,26) மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

மேலும், ஜூன் 27ம் தேதி கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் (கனமழை) விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கவனமாக இருங்கள்…