Header Top Ad
Header Top Ad

போக்சோ கைதி கோவை சிறையில் உயிரிழப்பு!

கோவை: சிறார்களுக்கு எதிரான குற்ற ( போக்சோ ) வழக்கில் கோவை சிறையிலடைக்கப்பட்டிந்த கைதி திடீரென உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி பெரியபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் கடந்த 2020ம் ஆண்டு போக்சோ வழக்கில் கவுந்தப்பாடி காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இந்த வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று சிறையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

சிறை மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தங்கராஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அவருக்கு சிறை கைதிகள் வார்டில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Recent News