கோவை: கோவையில் நாளை 3 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்படும் நிலையில், நாளை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
Advertisement

குனியமுத்தூர் துணை மின் நிலையம்:-
குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒருபகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் குனியமுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
மயிலம்பட்டி துணை மின் நிலையம்:-
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், மயிலம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்.
மலையாடிபாளையம் துணை மின் நிலையம்:-
பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வட வேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் மற்றும் மலையாடிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்படலாம்.