கோவை: புகழ்பெற்ற கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பிரசன்னா சினேகா சாமி தரிசனம் செய்தனர் !!!
கோவை: பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று தான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .மேலும் அருணகிரிநாதர் மற்றும் கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட ஆலயமாகவும் திகழ்கிறது .
Advertisement

புகழ்பெற்ற கோவை பட்டீஸ்வரர் கோவிலுக்கு கிரிக்கெட் வீரர் சேவாக் சமீபத்தில் சாமி தரிசனம் செய்தால், மேலும் நடிகர் சூர்யா, யோகி பாபு போன்ற நடிகர்களும் இந்தக் கோவிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரசன்னா சினேகா அவர்களது மகனுடம் வந்து சாமி தரிசனம் செய்தனர்
இந்த பட்டீஸ்வரர் திருக்கோயில் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் பட்டீஸ்வர சாமியையும் பச்சை நாயகி அம்மனையும் வணங்கி வழிபட்டனர். இருவரையும் கண்ட பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
Advertisement
