கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில்!

கோவை: வாடகை வீட்டில் பாலியல் தொழில் செய்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாயிபாபா காலனி காமராஜர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில், வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த கோவிந்தன் மகன் சுஷி(48) மற்றும் கர்நாடகா மாநிலம் கோலாரை சேர்ந்த தீபா(37) ஆகிய இருவரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து இது குறித்து சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...