கோவையில் சோதனை சாவடியில் 30 லட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை: கோவை எட்டிமடை சோதனை சாவடியில் 30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை- பாலக்காடு சாலை க.க.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, எட்டிமடை சிறப்பு சோதனை சாவடியில், போலிசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலிசார் சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் 30 லட்சம் பணம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார்
விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கந்தே கவுண்டர் சாவடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் பணத்தை எடுத்து சென்றதும், Surya groups என்ற கம்பெனியில் இருந்து KMS engineering என்ற நிறுவனத்திற்கு பணத்தை கொண்டு செல்வதாகவும் , கட்டுமான பணிக்கு பொருட்கள் வாங்கியதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கைபற்றபட்ட பணத்திற்கான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு 30 லட்சம் பணம் மற்றும் பணத்தையும், பணத்தை கொண்டு வந்த சுரேஷ்குமார் என்பவரையும் வருமான வரிதுறை அதிகாரிகளிடம் போலிசார் ஒப்படைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...