கோவையில் இருசக்கர வாகன விபத்து.. மனைவி கண்முன்னே உயிரிழந்த இளைஞர்..!

கோவை: கோவையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெண் உட்பட 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (26), நேற்று முன்தினம் தனது மனைவி லீனா (23) உடன் பைக்கில் கோவைக்கு வந்திருந்தார். அவர்கள் சத்தி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மால் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த அரவிந்த்குமார் (33) ஓட்டி வந்த மற்றொரு பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில், இரு பைக்குகளிலும் சென்ற 3 பேரும் பலத்த தாக்கத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அலெக்ஸாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி லீனா மற்றும் மற்றொரு பைக் ஓட்டிய அரவிந்த்குமார் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

அவரும் வெளியூர்காரர் தான்: கோவையில் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை தெற்கில் வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி, வளர்ச்சி திட்டங்கள், அதிமுக விமர்சனம், 60,000 ஓட்டு வெற்றி நம்பிக்கை குறித்து பேசினார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...