கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்…

கோவை: கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.

இடைநிலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு செய்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மேலும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த நிலையில், இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திமுக அரசு கொடுத்த 311 வது வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு, சமஊதியம் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று கோவை மணிக்கூண்டு பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை பணி புறக்கணிப்பு செய்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு செல்லும் மாணவர்களில் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.