கோவை: கோவையில் பெட்ரோல் அடிக்க ஸ்கூட்டி சீட்டை திறந்த போது சீட்டு அடியில் இருந்த பச்சை பாம்பு
கோவை மாவட்டம் பன்னீர்மடையை சேர்ந்த பெண் ஒருவர் ஆவாரம்பாளையம் பகுதியில் அவரது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஸ்கூட்டியின் சீட்டை திறந்துள்ளார்.
Advertisement

அப்போது சீட்டு அடியில் சுமார் 3 அடி நீள பச்சை பாம்பு சுருண்டு கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சிய பெண் விலகி சென்றார். பின்னர் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஊழியரும் பொதுமக்களும் சேர்ந்த அந்த பாம்பை ஸ்கூட்டியில் இருந்து வெளியேற்றினர்.