கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது தென்னக ரயில்வே.
அதன்படி, (வண்டி எண்:06027) சென்னை சென்ட்ரலில் இருந்து மார்ச் 30 ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடையும்.
Advertisement

மறுமார்க்கத்தில், (வண்டி எண்:06028)போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 11.30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8.20க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இருக்கைகள்
AC 3-Tier & ஸ்லீப்பர் கோச்
நிறுத்தங்கள்
- போத்தனூர்
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- ஜோலார்பேட்டை
- காட்பாடி
- அரக்கோணம்
- பெரம்பூர்
- சென்னை சென்ட்ரல்
கோவைக்கான அரசு அறிவிப்புகள், மின்தடை அறிவிப்புகள், செய்திகளை அறிந்து கொள்ள News Clouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம் 👇