கோவை அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்த கலைத்திருவிழா

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவடைந்தது.

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை திருவிழாவின் இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா இரண்டு வாரங்களாக நடைபெற்றது. இதில் நடனம், கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், செயற்கை நாடகம், பாரம்பரிய கலை நிகழ்ச்சி போட்டிகள் ஆகியவை ஒவ்வொரு நாளும் நடைபெற்றது.

இறுதி நாளான இன்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இறுதி நாளான இன்றும் நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் எழிலி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Recent News

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- கைதானவர்களிடம் வழங்கப்பட்டது குற்றப்பத்திரிகை நகல்…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கோவையில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விமான நிலையம் பின்புறம் ஆண்...

Video

Join WhatsApp