சூலூர்: நண்பனைக் கொன்று எரித்த மூவர்; போதை தலைக்கேறியதால் முடிந்தது வாழ்க்கை!

கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த மூவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கேயம்பாளையத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை இவர் தனது நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்ததார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரிக்கவே தகராறு ஏற்பட்டது.

அப்போது, மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த சுரேஷின் நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் மது பாட்டிலால் சுரேஷை தாக்கினர்.

இதில், சுரேஷின் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அதிர்ச்சியடைந்த மூவரும் செய்வதறியாது நின்ற நிலையில், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து மது போதையிலேயே மூவரும், சுரேஷின் உடலை எரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தனர். இன்று விடிந்ததும், மதுபோதையில் கொலை செய்ததை உணர்ந்த மூவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து, சம்பவத்தை போலீசாரிடம் கூறினர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷின் உடலைக் கைப்பற்றினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குடிபோதையில் நண்பனை சக நண்பர்களே கொலை செய்து புதைத்த சம்பவம், சூலூர் பகுதியை உலுக்கியுள்ளது.

கோவை செய்திகளை மொபைலில் பெற எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...