கோவையில் கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை- ஏஜென்சி உரிமையாளர் கைது…

கோவை: கோவையில் வணிக கேஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கேஸ் ஏஜென்சி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.

கோவை மாவட்டத்திலும் இது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் சாந்தி ஏஜென்சீஸ் என்ற கேஸ் நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை குடோனில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இண்டேன்,பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் உணவு வழங்கல் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அங்கு 1000 வணிக கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

Advertisement

தொடர்ந்து ஏஜென்சி உரிமையாளர் கார்த்திக் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.

அதனைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் ஏஜென்சி அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

Comments are closed.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...