தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் (MASS) அனுபவம் வாய்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர்களின் குழுவின் செயல்படும் நிறுவனம் ஆகும். வேளாண் இரசாயனங்கள், உயிரி பூச்சிக்கொல்லிகள், உயிர்தூண்டிகள், உரங்கள், தாவர ஊட்டச்சத்துகள், விதைகள் மற்றும் தாவர வளர்ச்சி தூண்டிகள் மற்றும் கட்டுப்படுத்திகளுக்கான முழுமையான ஆராய்ச்சி சோதனை சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.

பல்வேறு வேளாண்-காலநிலை சூழ்நிலைகளில் தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் செயல்பாட்டை அறிவியல் முறையில் மதிப்பீடு செய்து, பாதுகாப்பான, நிலைத்த மற்றும் விவசாயி மையமான வேளாண் புதுமைகளை ஆதரிப்பதே இச்சேவைகளின் நோக்கமாகும்.

இது தொடர்பாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர் முனைவர் செந்தில் மற்றும் மியாபி அக்ரோசயின்ஸ் சர்வீசஸ் நிறுவன மற்றும் தலைமை செயல் அதிகாரி முனைவர் ஆசைத்தம்பி மணிக்கம் ஆகியோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பதிவாளர் முனைவர் சுப்ரமணியன் முன்னிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முதன்மையார் (SPGS), முனைவர் பாபு, தாவர உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கோகிலாதேவி மற்றும் முனைவர் சுரேஷ் துணைவேந்தரின் தொழில்நுட்ப தனி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சூலூரில் 800 அண்டாக்கள் பறிமுதல்- பறக்கும் படை அதிரடி…

கோவை: சூலூர் அருகே திமுகவினர் 800 சில்வர் அண்டாக்களை பதுக்கி வைத்திருந்த அதனுடன் சேர்த்து குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தேர்தல் விதிமுறைகளை...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...