கோவை: கோவையில் இருந்து புறப்படும் ரயில் 8 மணி ணெரம் தாமதமாகப் புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கோவை ஜங்சனில் இருந்து தன்பாத் வரை வாராந்திர சிறப்பு (ரயில் எண் 03680) இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில் நாளை காலை 7.50க்கு புறப்படுவதாய் இருந்தது.
Advertisement

ஆனால், ரயில் இணைப்பு பணிகள் காரணமாக 8ம் தேதி மாலை மாலை 4.15 மணிக்கு (மொத்தம் 8 மணி 25 நிமிடம் தாமதமாக) கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பு பயணிகளை அவதியடையச் செய்துள்ளது.