கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் குறைகள் மற்றும் சேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் மாதம் வரை வாரத்திற்கு 4 நாட்கள் தினமும் 6 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாமில் நகர்ப்புறங்களில் 13 துறைகள் கீழ் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளின் கீழ் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement

அதன்படி, கோவையில் நாளை (05.08.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் 13 வது வார்டுக்கு, வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆதி கல்யாண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.

கூடலூர் நகராட்சியில் 9,11,12 வது வார்டுகளுக்கு பி.ஆர்.கல்யாண மண்டபத்திலும், கருமத்தம்பட்டி நகராட்சியில் 1, 2 வார்டுகளுக்கு கத்தோலிக்க தேவங்கர் திருமணமண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 1,2,7,8,9,10,11,12 ஆகிய வார்டுகளுக்கு நரசிம்மநாயக்கன்பாளையத்திலுள்ள லட்சுமி கல்யாண மண்டபத்திலும்,

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் தேவராயபுரம், கோவிந்தபுரம், நம்பர் 10 முத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நம்பர் 10 முத்தூரில் உள்ள ஆர்.கே.என் மண்டபத்திலும்,

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ராசக்காபாளையம், புளியம்பட்டி, வெள்ளாளபாளையம், கொண்டேகவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு வெள்ளாளப்பாளையம் விஜய மஹாலிலும் என மொத்தம் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளன.

எனவே, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவித்துள்ளார்.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

Recent News

தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் எச்சரிக்கை

கோவை: தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலுக்கு முன்பு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 30 அம்ச கோரிக்கைகளை...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group