மரியாதைக்கு கூட கேட்பதில்லை; லிஸ்ட் போட்டு வைரமுத்து குமுறல்!

சென்னை: தனது பல்லவிகளை படத்தலைப்பாக பயன்படுத்துபவர்கள் மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை என்று பாடலாசிரியர் வைரமுத்து குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

Advertisement

என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட
ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

ஒன்றா இரண்டா…

பொன்மாலைப் பொழுது,
கண் சிவந்தால் மண் சிவக்கும்,
இளைய நிலா,
ஊரத் தெரிஞ்சுகிட்டேன்,
பனிவிழும் மலர்வனம்,
வெள்ளைப் புறா ஒன்று,
பூவே பூச்சூட வா,
ஈரமான ரோஜாவே,
நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம்,
மின்சாரக் கண்ணா,
கண்ணாளனே,
என்னவளே, உயிரே,
சண்டக்கோழி,
பூவெல்லாம் கேட்டுப் பார்,
தென்மேற்குப் பருவக்காற்று,
விண்ணைத் தாண்டி வருவாயா,
நீ தானே என் பொன் வசந்தம்,
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்,
தங்கமகன்

Advertisement

இப்படி இன்னும் பல…

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை

செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன்

ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது

ஆனால், என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?

இவ்வாறு வைரமுத்து தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Recent News

மீண்டும் ஜெய்லர் 2 ஷூட்டிங்: கோவை வந்தார் ரஜினி; கேள்விக்கு No Comments…!

கோவை: ஜெய்லர் 2 படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி கோவை வந்தார்.ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கோவை வந்த ரஜினிகாந்த் 20 நாட்கள்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...