கோவையில் எங்கெங்கு நீட் மையங்கள்; எத்தனை பேர் தேர்வு எழுதுகின்றனர்?

கோவை: கோவை மாநகரில் மட்டும் 5,736 மாணவர்கள் நாளை நீட் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.

Advertisement

கோவை மாநகரில், 8 கல்வி நிறுவனங்களில் 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவை அரசு கலைக்கல்லூரி, அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரி, ஜி.சி.டி, கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி, அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சி.ஐ.டி, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி உள்ளிட்ட மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த மையங்களில் மட்டும் 5,736 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு நடைபெறும் மையங்களில் தலா ஒரு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முதலே கல்வி நிறுவனங்களில் போலீசார் பாதுகாப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement

Recent News

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்- கோவையில் ஆவேசம் கொண்ட அன்புமணி ராமதாஸ்

கோவை: ஜிடி நாயுடு பெயரில் நாயுடு என்ற ஜாதி பெயரை கருப்பு மை கொண்டு அழித்தவர்கள் தான் தற்பொழுது அவரது பெயரிலேயே மேம்பாலத்தை திறந்து உள்ளார்கள் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.கோவை காந்திபுரம்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...