மருதமலையில் யோகிபாபு சாமி தரிசனம்

கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

கோவை, மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு வரும் போது பக்தர்கள் முந்தி அடித்துக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திரை பிரபலங்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் பிரபல திரைப்பட காமொடி நடிகரான யோகி பாபு மருதமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பாலக்காட்டில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதில் நடித்து வரும் யோகி பாபு மருதமலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்தார்.

அப்போது சொந்தமாக தயாரிக்க இருக்கும் படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். யோகி பாபு கண்ட பக்தர்கள் முநிதி அடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...