வர்டா மாமே… கோவையில் பாதுகாப்பை மீறி துணை ஜனாதிபதி கூட்டத்தில் புகுந்த இளைஞர்கள்!

கோவை: கோவையில் துணை ஜனாதிபதி நிகழ்ச்சி கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பை மீறி, ஸ்கூட்டரில் புகுந்த இளைஞர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துணை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று முதன் முறையாகக் கோவை வந்தார். கோவையின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். அதன்படி, டவுன்ஹால் அருகே உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவிக்கச் சென்றார்.

Advertisement

அந்த பகுதியில் ஏராளமான பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். துணை குடியரசுத் தலைவர் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. அப்போது அவ்வழியாக இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டரில் (TN 66 AQ 4740) வந்தனர்.

யாரும் எதிர்பாராத விதமாக அந்த இளைஞர்கள் இருவரும், போலீஸ் தடுப்பை மீறி திடீரென துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி கூட்டத்திற்குள் புகுந்தனர். சுதாரித்துக்கொண்டு போலீசார் அவர்களைப் பிடிப்பதற்கு முன் தங்களது வாகனத்தில் ‘சிட்டாய்’ பறந்தனர்.

Advertisement

அந்த இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் போலீசார் பாதுகாப்பு குறைபாடு செய்ததாக பாஜக.,வினர் திடீர் மறியல் போராட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group