மோடி ட்ரிப்பில் குண்டு வெடிப்பை செயல்படுத்த போகிறோம் என்று வந்த இமெயிலால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணியளவில் இ-மெயில் முகவரியை ஊழியர்கள் பார்வையிட்ட போது, அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு மெயில் அனுப்பப்பட்டிருந்தது.

அதில் ”மோடி கோவை ட்ரிப்பில் குண்டுவெடிப்பை செயல்படுத்த போகிறோம்” என்று அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் இரண்டு நுழைவு வாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், 4 மாடியில் செயல்பட்டு வரும் புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு அலுவலக அறையிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஆனால் நீண்ட நேர சோதனைக்கு பிறகும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 10வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

Advertisement

மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கும், கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிரதமர் மோடி வரும் வேளையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கோவையில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் குறித்து அவதூறு- கோவையில் புகார்…

கோவை: தமிழக முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் மீது அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ஜ கோரி கோவை மாநகர...

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...