கோவை கல்லூரியில் மாணவியை குத்திய மாணவர் சிறையிலடைப்பு

கோவை: கோவையில் காதல் விவகாரத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவியை கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் ஆர்.எஸ். புரத்த்தை சேர்ந்த ஹர்ஷவர்தன்(18) என்பவரும் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.

பின்னர் ஹர்ஷவர்தன் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் மாணவி அவரது காதலை ஏற்க மறுத்ததாகவும், வேறு சில மாணவர்களுடன் நட்பாக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹர்ஷவர்தன் மாணவி மீது ஆத்திரத்தில் இருந்தார். நேற்று காலை கல்லூரிக்கு வரும்போதே மாணவன் வீட்டில் இருந்து காய்கறி வெட்டும் சிறிய கத்தியை எடுத்து வந்துள்ளார். பின்னர் கல்லூரி வளாகத்தில் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

Advertisement

ஏன் தன்னை காதலிக்காமல் வேறு சிலருடன் பேசுவதாக வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன் தான் வைத்திருந்த கத்தியால் மாணவியை குத்தினார். இதில் அவருக்கு கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடினர்.

உடனே மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து மாணவியை கத்தியால் குத்திய ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன்(18) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது சரவணம்பட்டி போலீசார் கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பின்னர் கைதான ஹர்ஷவர்தனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மருத்துவமனையில் மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...