கோவை அருகே காரில் சென்ற இரண்டு நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்…

கோவை: நண்பரின் காரை எடுத்து கொண்டு சென்று மரத்தில் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Advertisement

கோவை அடுத்த பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் நண்பரின் காரை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டிச் சென்று கட்டுபாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியதில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்தனர்.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோஹித்(18) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு B.com படித்து வருகிறார். இவரது நண்பர் பன்னீர்மடையை சேர்ந்த சுதர்சன்(22) பிளக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று இரவு சுதர்சனை பார்ப்பதற்காக ரோகித் அவரது நண்பர்கள் 3 பேருடன் காரில் பன்னீர்மடைக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இடையே சீனிவாசன் என்பவரை பார்த்துவிட்டு இறங்கி பேசி கொண்டிருந்திருந்துள்ளனர். அப்போது ரோஹித் சுதர்சனை மட்டும் அழைத்துக்கொண்டு காரில் ஒரு ரவுண்ட் சென்று வருகிறேன் என கூறி கொண்டு காரில் பன்னீர்மடை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

Advertisement

பிறகு பன்னீர்மடையில் இருந்து திரும்பி வரும் வழியில் பாப்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர்.பி நகர் என்னும் இடத்தில் வேகமாக வந்ததாலும், தூக்க கலக்கத்தில் இருந்ததாலும், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் வலது புறமாக இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளது.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...