கோவை அருகே உணவு தேடி வந்த யானையின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை தோட்டத்து வீட்டின் கதவை உடைத்தது.

Advertisement

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குறிப்பாக காட்டுயானைகள், காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.

இந்நிலையில் பன்னிமடை – வரப்பாளையம் சாலையில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டின் கதவை நள்ளிரவில் காட்டு யானை உடைத்துத் தவிடு, புண்ணாக்கு மூட்டுகளை எடுக்க முயன்றுள்ளது. பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின்பு யானையைப்வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அதேபோன்று நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஊருக்குள் உணவு தேடிக்கொண்டு உலா வந்த ஒற்றைக் காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...