கோவைப்புதூரில் நடந்து சென்றவர் மீது பைக்கை மோதி பணம் பறிப்பு!

கோவை: கோவைப்புதூரில் சாலையில் நடந்து சென்ற போது தொழிலாளி மீது பைக்கை மோதிவிட்டு கத்தியை காட்டி பணம் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (29). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று மதியம் இவர் அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அவர் மீது மோதினார். அதில் ஏழுமலை நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

Advertisement

உடனே பைக்கை நிறுத்தி வந்த அந்த வாலிபர் திடீரென ஏழுமலையை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.3200ஐ பறித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து ஏழுமலை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஏழுமலையை பைக்கில் மோதி, தாக்கி பணத்தை பறித்தது சிவகங்கையை சேர்ந்த சதீஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பு தூய்மை…

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்கள் சிறப்பு தூய்மை செய்யப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின் படி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய...

Video

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும் லட்சணமா?

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.