கோவைப்புதூரில் நடந்து சென்றவர் மீது பைக்கை மோதி பணம் பறிப்பு!

கோவை: கோவைப்புதூரில் சாலையில் நடந்து சென்ற போது தொழிலாளி மீது பைக்கை மோதிவிட்டு கத்தியை காட்டி பணம் பறித்து தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (29). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று மதியம் இவர் அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், அவர் மீது மோதினார். அதில் ஏழுமலை நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

Advertisement

உடனே பைக்கை நிறுத்தி வந்த அந்த வாலிபர் திடீரென ஏழுமலையை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.3200ஐ பறித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.

Advertisement

இதுகுறித்து ஏழுமலை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஏழுமலையை பைக்கில் மோதி, தாக்கி பணத்தை பறித்தது சிவகங்கையை சேர்ந்த சதீஷ்வரன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...