கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுகிறது!

கோவை: அதி கனமழை எச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் ஆகஸ்ட் 5, 6ம் தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மூடப்பட்டது.

Advertisement

ஆனால், இரு தினங்களிலும் கோவையில் எதிர்பார்த்த மழைப்பொழிவு காணப்படவில்லை. இந்த நிலையில், கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான (ரெட் அலர்ட்)வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்ட காரணத்தால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

தற்போது மழை இல்லாத காரணத்தாலும் அருவியில் தண்ணீர் வரத்து சீராக வருவதாலும் மீண்டும் இன்று (7.8.2025) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி திறக்கப்படுகிறது. என்று வனத்துறை அறிவித்துள்ளது

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp