லிங்க் 2 லிங்க் மோசடி; பாதிக்கப்பட்டவர்களை அழைக்கிறது கோவை போலீஸ்!

கோவை: கோவையில் செயல்பட்டு வந்த ‘லிங்க் 2 லிங்க்’ என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை பீளமேடு ஸ்ரீ நகரில் ‘லிங்க் 2 லிங்க்’ என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரில், போலீசார் நிறுவனத்தின் இயக்குனர் சுதாகர் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடையவரகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் கோவை மாநகர போலீஸ் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மேட்டுப்பாளையம் அருகே 4 லட்சம் பறிமுதல்…

கோவை: மேட்டுப்பாளையம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.