விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சிறுவனின் உடல் உறுப்பு

கோவை: மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கிட்னி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

கோவை- திருப்பூர் சாலையில் விபத்தில் சிக்கி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 17 வயது சிறுவன் இளங்கோ, சிகிச்சை பலன் இன்றி மூளைச்சாவு அடைந்துள்ளார் .

Advertisement

இந்த நிலையில், மருத்துவர்கள் சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் வாய்ப்பு குறித்து பெற்றோரிடம் ஆலோசனை நடத்தினர்.
தங்கள் மகனின் உயிரால் மற்றவர்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும் என்ற மனப்பாங்குடன், பெற்றோர் தானம் செய்ய சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் உடல் உறுப்புகளைப் பாதுகாப்பாக பிரித்து தானம் செய்யும் செயல்முறைகளை தொடங்கினர். அவற்றில் கிட்னி, சென்னையில் சிகிச்சை பெற்று வந்த சிறுநீரக பாதிப்பு கொண்ட ஒரு பெண் நோயாளிக்கு பொருத்தமானதாக இருந்ததால், அதனை சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

Advertisement

கிட்னியை விரைவாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு செல்ல காவல்துறை ‘கிரீன் காரிடர்’ ஏற்பாடு செய்தது. இதன் மூலம் திருப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வரை கிட்னி கொண்டுவரப்பட்டது. கோவை விமான நிலையத்தை அடைந்ததும், மத்திய விமான பாதுகாப்பு படையினர் சிறப்பு பாதுகாப்பு அளித்து, அதனை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பினர்.

இந்த முயற்சி மூலம், ஒருவரின் உடல் உறுப்புகள் பலருக்கு புதிய வாழ்வை அளிக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு இது. மருத்துவர்கள், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்று வருகிறது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group