டிராபிக் தாத்தா மறைவு- போக்குவரத்து காவலர்கள் அஞ்சலி

கோவை: டிராபிக் தாத்தா மறைவிற்கு காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கோவையை சேர்ந்த 88 வயதான சமூக ஆர்வலர் சுல்தான் மக்கள் பலராலும் அன்புடன் டிராபிக் தாத்தா என அழைக்கப்பட்டு வந்தார்.

வயதான போதிலும் உக்கடம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் எற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வந்தார்.

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அப்பகுதி மக்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இன்று அவரது உடல் துடியலூர் அடக்கஸ்தளத்தில் அடக்கம்
செய்யப்பட உள்ள நிலையில் போக்குவரத்து காவலர்களும் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும் மலர் மாலை வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

அவரது மறைவு அப்பகுதி மக்கள், போக்குவரத்து காவலர்கள் பலரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...