பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருடிய நீலிக்கோணாம்பாளையம் நதியா: வீடியோ

கோவை: பேருந்தில் மூதாட்டியிடம் செயினை
திருடும் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை நீலிகோணம்பாளையம் சக்தி நகர் சேர்ந்த லட்சுமி (73) என்ற மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூலூரில் உள்ள மகளை பார்த்துவிட்டு தனியார் பேருந்தில் கோவை வந்துள்ளார்.

அப்போது அருகில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்தில் அருகே அமர்ந்திருந்துள்ளார். பின்னர் அவர் லட்சுமி அணிந்திருந்த செயின் கொக்கி கழண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் மூதாட்டி செயினை கழட்டி தனது பரிசில் வைத்துள்ளார்.

பின்னர் ராமநாதபுரம் சந்திப்பில் இறங்கிய லட்சுமி பரிசை சோதனை செய்த போது அதிலிருந்த செயின் மாயமாக இருந்தது.

Advertisement

இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலிசார் விசாரணையில் செயினை திருடியது நதியா (38) என்பதும் அவர் மீது உக்கடத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

பின்னர் போலீசார் நதியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தற்போது அந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.