துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களுக்கு கோவை ஊழியர்கள் வீரவணக்கம்

கோவை: துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரயில்வே ஊழியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

1968ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி AIRF/ SRMU சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

Advertisement

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் செப்டம்பர் 19ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு பல்வேறு ரயில்வே பணிமனைகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை ரயில்வே பணிமனையில் SRMU சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ரயில்வே ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர் மேலும் எட்டாவது சம்பள கமிஷன் கமிட்டியை அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp