ஆந்திராவை போன்று தமிழக அரசும் இதனை செய்ய வேண்டும்- கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

கோவை: அரசு நிதி உதவி வழங்கிட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்டோவிற்கு மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. எனவே மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டுமென ஆட்டோ ஓட்டுநர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே தனியார் ஆன்லைன் வாடகை வாகனங்களால் தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் ஆந்திர அரசாங்கம் நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோ டிரைவர் சேவை என்ற திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் நிலையில் தமிழக அரசும் அதே போன்ற நிதி உதவியை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களது கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...