மதுக்கரையில் ஆம்புலன்ஸ்-கார் மோதி கோர விபத்து! – வீடியோ

கோவை: மதுக்கரையில் ஆம்புலன்ஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு ஆம்புலன்ஸில் நோயாளியின் உடலை கொண்டு ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ஒரு ஆம்புலன்ஸ் கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர். 

இன்று காலை மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே கோவையிலிருந்து கேரளாவிற்கு ஒரு கார் சென்றது.

காரில் 2  பேர் பயணம் செய்தனர். பெட்ரோல் பங்க் அருகில் 2 வாகனங்களும் திடீரென்று மோதிக்கொண்டன.

இதில் கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 
ஆம்புலன்ஸ் வேன் ரோட்டில் இருந்து அருகில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்து நடந்ததை பார்த்த பொதுமக்கள் பேட்ரோல் போலீஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்து போராடியவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp