மீண்டும் வருகிறது அந்த 7 நாட்கள் திரைப்படம்!

கோவை: தமிழ் திரையுலகில் புதிய படமாக “அந்த 7 நாட்கள்” வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.

பாக்யராஜ் நடித்து இயக்கிய படம் “அந்த 7 நாட்கள்”. இப்படம் கடந்த 1981ல் வெளியாகி வெற்றிநடை போட்டது.

இதனிடையே, தற்போது “அந்த 7 நாட்கள்” என்ற அதே தலைப்பில், பாக்யராஜ் மீண்டும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.

ரொமான்ஸ் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து உருவாகியுள்ள இப்படத்தை எம். சுந்தர் எழுதி இயக்கியுள்ளார். முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இந்த படம், தரமான ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சச்சின் சுந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜிதேஜ், ஸ்ரீசுவேதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ரசிகர்களை கவரும் வகையில் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கதைக்கு ஆழத்தை சேர்க்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

கோபிநாத் துரை ஒளிப்பதிவில், முத்துமிலன் ராமு எடிட்டிங் மற்றும் VFX பணிகளை செய்துள்ளார்.

இப்படத்தில் காதலும், அதிரடி திருப்பங்களும், ரொமான்டிக் திரில்லர் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதால், ரசிகர்களை கவரும் என்றும், சச்சின் சுந்தர் காதலையும், சஸ்பென்ஸையும் பிரதிபலிக்கும் இசையமைத்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் பாடல்கள், டீசர்கள், பின்னணி காட்சிகள் ஆகியவை வெளியீட்டுக்குத் தயாராகிக் வருகின்றன.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வைரமுத்துவுக்கு உயரிய விருது.. கமல்ஹாசனை வம்புக்கு இழுத்த சின்மயி!

இந்தியாவிலேயே இலக்கியத்தில் உயரிய விருதான ஞானபீடம் விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சின்மயி அவரை வசைபாடியுள்ளா ர். தமிழுக்கு பெருமை சேர்த்த வைரமுத்து அகிலன், ஜெயகாந்தனுக்கு அடுத்தபடியாக இந்த விருது கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...