கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களில் இன்று நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அலங்கார செடிகள் உள்ள இடம் காம்பவுண்ட் சுவர் என அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த 3 முறை இந்தியாவில் உள்ள பகுதியில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளி நாட்டில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில் சைபர் கிரைம் போலிசார் யார் இந்த மிரட்டலை விடுகின்றனர் என தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp