மூங்கிலில் தேசத்தலைவர்கள்- கோவை கலைஞரின் கைவண்ணம்…

கோவை: மூங்கிலில் இரும்பு கம்பியை கொண்டு தேசத்தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை கலைஞர் UMT ராஜா.

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் UMT ராஜா மூங்கிலில் தேச தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூங்கிலில் இரும்பு கம்பியை நெருப்பில்காய்த்து எட்டு தேசத்தலைவர்களின் ஓவியத்தை வரைந்துள்ளார் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் UMT ராஜா என்பவர்.

12 மணி நேரம் செலவழித்து என்றென்றும் அழியாத காவியங்கள் என்ற முறையில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக இந்த ஓவியத்தில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், ஜவர்கலால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், காமராஜர், பகத்சிங் போன்ற தலைவர்களின் ஓவியத்தை வரிசைப்படுத்தி வரைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp