கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கு சில்வர் அண்டாவை பரிசு பொருளாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு இவ்வாறான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கோவையில் தேர்தலை முன்னிட்டு 90 பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்கடம் பகுதியில் பழைய குடோன் ஒன்றில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்படும் சில்வர் அண்டா பரிசு பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சுமார் 90க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வைத்துள்ளனர்.

