கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்- காரணம் என்ன?

கோவை: நீதிமன்றங்களில் e-filing முறையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர்.

நீதிமன்றங்களில் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல் e-filing முறை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு சில வழக்கறிஞர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்றங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் கட்டாயமாக்குவதை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்திட வலியுறுத்தியும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி உள்ளனர். கோவையிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் இவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகம் முன்பு கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.