கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரம்- மாறி மாறி போராட்டம் நடத்திய கவுன்சிலர்களால் பரபரப்பு…

கோவை: கோவை மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் தொடர்பாக மாறி மாறி போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் மாறி மாறி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, மாநகராட்சி அலுவலகத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுகவினர் ஒரே நேரத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பூர்வாங்க பணிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் மத்திய அரசு இந்த திட்டத்தை புறக்கணித்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறினர்.

Advertisement

அதே சமயம், தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை முறையாக தயாரிக்கவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக பதவியேற்ற குமார ராஜபாண்டியனுக்கு மேயர், கமிஷனர் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் மாமன்ற கூட்டத்திலும் அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் இது குறித்து முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது, தொடர்ந்து மாநகராட்சி மேயர் பிரபாகரனை இரண்டு மாதங்களுக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதித்தார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக முதன்மை செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, உதயநிதி ஸ்டாலின் கைது சட்டப்படி சரியான நடவடிக்கை என்றும், அவரது பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து கருத்து தெரிவித்தார்.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.