செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மதிவதனி பரப்புரை…

கோவை: கோவை தெற்கு தொகுதியை செந்தில் பாலாஜி பெறுவது தான் அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக இருக்கும் என்று மதிவதினி தெரிவித்துள்ளார்

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி இன்று ராமநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்பொழுது மக்கள் மத்தியில் பேசிய அவர், குழந்தைகள் படித்து பட்டம் பெற்று சுயமரியாதையுடன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் உதயசூரியன் என்ற சின்னத்தை தவிர வேறு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்த ஒரே ஒரு முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றார். பெண்கள் வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டும், ஆனால் ஆண்களுக்கு கவலை இல்லை வீட்டிற்கு சென்றால் எடுத்து வைத்திருப்பார்கள் சாப்பிட்டு கொள்ளலாம் என்றார். பெண்கள் என்றாலே உழைக்க கூடியவர்கள் தான் என்றும் உங்கள் கணவர் யாராவது நீங்களை உணவை பாராட்டி உள்ளார்களா? அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள் என்றார்.

மகளிருக்கான உழைப்பை அங்கீகரித்து 1000 ரூபாய் கொடுத்தது மு.க.ஸ்டாலின் தான் என்றார். மேலும் மீண்டும் திமுக ஜெயித்தால் 2000 ரூபாய் வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது என்றார். பெண்களுக்கு கணவரை நேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இல்லை, பிடித்த உணவை சாப்பிடுவதற்கும் வாய்ப்பு இல்லை என கூறிய அவர், உலக வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் கையில் சாய்ஸ் கொடுக்கப்படுவதாக 8000 ரூபாய் கூப்பன் திட்டத்தை சுட்டிகாட்டினார். இதற்கு முன்பு இருந்த அரசு யாராவது பெண்கள் பற்றி பேசியுள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய இருப்பது பெண்களால் தான் என்றும் கூறினார்.

இங்கு இத்தனை பேர் இருந்தாலும் ஜாம்பி மாதிரி எதுவும் ஏறிவரவில்லை, ஏறி குதித்து யாரும் வரவில்லை, அய்யய்யோ என்று நினைக்கவில்லை என்றால் இது கருப்பு சிவப்பு படையாக இருப்பது தான் என்றார்.

செந்தில்பாலாஜிக்கு கோவை தெற்கு தொகுதி உறுதியானதில் இருந்து எதிரணியில் ஆட்கள் இல்லை என்றும் எதிர் கட்சியினரை விமர்சித்தார். கோவை தெற்கு தொகுதியை செந்தில் பாலாஜி பெறுவது தான் அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை கண்ணாளன் கென்னடியின் 33 வது நினைவு நாள் அனுசரிப்பு…

கீர்த்தி சக்ரா வீரர் கண்ணாளன் கென்னடி 33ஆம் ஆண்டு நினைவு நாளில் கோவை நாயக்கன்பாளையத்தில் ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்

Video