மிலாது நபி- கோவையில் ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி

கோவை: மிலாது நபி விழாவை முன்னிட்டு கோவையில் ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி சமைத்து வழங்கப்பட்டது.

இஸ்லாமிய மக்களின் கடவுள் தூதுவராக விளங்கும் முகமது நபியின் பிறந்த நாள் மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நபிகளின் சிறப்புகளை போற்றி வழிபடுவர்.

Advertisement

நேற்று முதலில் பள்ளிவாசல்களில் மிலாது நபி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. அதில் ஆயிர கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகைகளை மேற்கொண்டனர்.

மிலாது நபி பண்டிகையின் ஒரு பகுதியாக கோவை கோட்டைமேடு பகுதியில் இஸ்லாமியர்கள் பலரும் இணைந்து ஒரு லட்சம் பேருக்கு பிரியாணி உணவு, குஸ்கா ஆகியவற்றை சமைத்து வழங்கினர்.

Advertisement

இரவு துவங்கி அதிகாலை வரை சுமார் 20க்கும் மேற்பட்ட பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி உணவு சமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரபி பாடசாலை குழந்தைகள் நபிகள் நாயகத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதியில் நடனமாடி அவரது சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp