விதை சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம்- கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: விதைச்சான்று மற்றும் மின்சார கட்டண விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு விதைச்சான்று மீதான புதிய சட்டத்தையும் மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

இதில் மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் கொண்டுவந்துள்ள புதிய விதை சட்டத்திற்கு எதிராகவும் மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில் மத்திய அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இந்த புதிய விதை சட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் இதனால் முற்றிலும் விவசாயம் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையான விதைகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தான் பெறவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் ஒருவருக்கொருவர் விதைகளை பகிர்ந்து கொள்ள கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும் மரபணு மாற்றப்பட்ட விதைகளால் எந்த பயனும் இருக்காது என்றார். எனவே இந்த விதை சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

அதேபோல மின்சார திருத்த சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்திய அவர் இதனால் ஏழை எளிய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதற்கு முன்பு டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து வருட கணக்கில் போராட்டம் நடத்தி அந்த சட்டத்தை திரும்ப பெற்றனர் என்பதை குறிபிட்ட அவர் அதே போல தற்பொழுது கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

Recent News

அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று அப்போது தெரியும்- கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி…

கோவை: அதிமுகவின் ரிசல்ட் என்னவென்று தேர்தல் எண்ணிக்கைக்கு பிறகு தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம் நகர் பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி நிகழ்ச்சி...

Video

Join WhatsApp