கோவை: கோவை, திருப்பூர், ஈரோடு வழியாகச் செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ரயில் எண்.03680: கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் ( வழி: திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை) ஜூலை 15ம் தேதி காலை 7.50 மணிக்கு கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டு இருந்தது.
Advertisement

ஆனால் இணைப்பு ரயில் தாமதமாக இயக்கப்பட்டதால், இந்த ரயில் ஜூலை 15ம் தேதி தாமதமாக இயக்கப்பட உள்ளது.
8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக கோவையிலிருந்து இந்த ரயில் மாலை 4.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.