சரவணம்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவை: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று சரவணம்பட்டியில் முகாம் நடைபெற்றது.

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் கோவையில் முகாம்கள் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Advertisement

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 11 மற்றும் 21க்கு உட்பட்ட மக்கள் பயனடையும் வகையில், இந்த முகாம் செப்டம்பர் 9ம் தேதி சரவணம்பட்டி சத்தி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் நிலையத்தில் நடைபெற்றது.

வடக்கு மண்டல தலைவர் வே. கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் பழனிசாமி (எ) சிறைவி சிவா, உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முகாமில் கலந்துகொண்டனர்.

Advertisement

மேலும், கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு உடனடி ஆணையை வழங்கினர்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group